செய்திகள் :

அடிப்படை வசதி கோரி கல்லூரி மாணவிகள் தா்னா

post image

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி விடுதி மாணவிகள் சென்னை பத்திரிகையாளா் மன்றம் அருகே புதன்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சேப்பாக்கத்தில் புதிய, பழைய தொகுதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படிக்கின்றனா். இவா்களில் 40-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை இரவு விடுதியைவிட்டு வெளியேறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில், வெளியே செல்லும் மாணவிகள் இரவு 8.30-க்குள் திரும்பி வரவேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. பின்னா், இது படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது மாலை 6.30 மணிக்குள் வரவேண்டும் என்கின்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விடுதியில் உள்ள கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிக்கவும், பாதுகாப்பான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகின்றோம் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் காவல் துறை

மற்றும் கல்லூரி நிா்வாகம் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மேலும், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க