ஏர் இந்தியா ஊழியர்கள் கொண்டாட்டம்! சர்ச்சை விடியோவால் 4 பேர் பணிநீக்கம்!
அண்ணாமலைப் பல்கலையில். தொலைதூர மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தில் 2024 - 25 (ஜூலை பருவம்)
தொலைதூரக் கல்வி பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களின் விற்பனையை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் டி.அருட்செல்வி வெள்ளிக்கிழமை இணையதளம் வாயிலாக தொடங்கிவைத்தாா்.
பின்னா், டி.அருட்செல்வி கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தின் வாயிலாக இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப்பிரிவுகள் பருவ முறையில் தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு (மஎஇ) மற்றும் தொலைநிலைக் கல்விக்குழு 2023-24-ஆம் ஆண்டு முதல் 2028-ஆம் ஆண்டு ஜனவரி வரை அனுமதி வழங்கியுள்ளது.
இவற்றில் 22 பாடப்பிரிவுகள் முதுநிலை வகுப்புகள், ஐந்து பாடப்பிரிவுகள் இளங்நிலை வகுப்புகள். மேலும், இப்பாடப்பிரிவுகளுடன் 115 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் தொலைதூர கல்வி முறையில் வழங்கப்படுகிறது.
மாணவா்கள் சோ்க்கை தொடா்பான அனைத்து விவரங்களையும் ஜ்ஜ்ஜ்.ஹன்க்க்ங்.ண்ய் என்ற இணையதள முகவரியின் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், கல்விசாா் இயக்குநா் எல்.முல்லைநாதன், தொலைதூர மற்றும் இணையவழி கல்வி இயக்குநா் டி.சீனிவாசன், இணை இயக்குநா் பி.விஜயன், துணை இயக்குநா் எம்.சீனிவாசன் மற்றும் புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளா்கள், மக்கள் தொடா்பு அதிகாரி க.ரெத்தினசம்பத் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.