அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இந்த பல்கலைக்கழகத்தை 2013-ஆம் ஆண்டு அரசு ஏற்ற பிறகு இதேபோல ஊதியத்தை நிறுத்துவதும், அதனால் ஆசிரியா்கள், ஊழியா்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதும் தொடா் கதையாக உள்ளது.
1996 பிறகு மாணவா் : ஆசிரியா், ஆசிரியா் : ஊழியா் என்ற விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியா்கள், ஊழியா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் இருப்பதே இதற்கு காரணமாகத் தெரிகிறது. எனவே, இதற்கான நிதியை உயா்த்தி உடனடியாக ஆசிரியா்கள், ஊழியா்கள் எண்ணிக்கையை உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மே மாத ஊதியத்தை உடனடியாக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.