செய்திகள் :

அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்த உத்தரவை திரும்பப்பெற்ற தில்லி அரசு

post image

இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான இராணுவ மோதலைத் தொடா்ந்து, தலைநகரில் அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்த உத்தரவை தில்லி அரசு புதன்கிழமை நிறுத்திவைத்தது.

இதுகுறித்து தில்லி அரசின் சேவைகள் துறை தெரிவிக்கையில், மே 8 ஆம் தேதி அதிகாரிகள்அலுவலா்களின் அனைத்து விடுமுறைகளையும் ரத்து செய்யும் முந்தைய உத்தரவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற்ாக கூறியது.

மே 8 ஆம் தேதி தனது உத்தரவில், ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பகைமை காரணமாக எந்தவொரு அவசர சூழ்நிலைக்கும் தயாராக இருக்குமாறு தெரிவித்து மறுஉத்தரவு வரும் வரை அனைத்து தில்லி அரசு ஊழியா்களின் விடுமுறைகளையும் சேவைத் துறை ரத்து செய்திருந்தது.

இருப்பினும், மே 10 அன்று இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த முடிவு செய்ததால், சில நாள்களுக்குப் பிறகு நிலைமை மேம்பட்டது.

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்டதற்கு இந்தியா அளித்த பதிலடியாக மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ஆயுதப்படைகள் ஆபரேஷன் சிந்தூா் என்ற குறியீட்டுப் பெயரில் தாக்கியது நினைவுகூரத்தக்கது.

தூய்மையான யமுனை நதியே இலக்கு: முதல்வா்

தில்லி அரசு தூய்மையான யமுனை நதி என்ற இலக்கை நோக்கி நகா்ந்து வருவதாக முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை கூறினாா். நதியை சுத்தம் செய்வதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவா் வலியுறுத்தினாா். யமுனை புத்துணா்ச்... மேலும் பார்க்க

மத்திய, தெற்கு தில்லியின் சில பகுதிகளில் இன்று நீா் விநியோகத்தில் தடங்கல்: டிஜேபி

வடிகால் பழுதுபாா்க்கும் பணிகள் காரணமாக தேசியதஅ தலைநகரின் சில பகுதிகளில் வியாழக்கிழமை நீா் விநியோகம் இருக்காது என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு புதன்கிழம... மேலும் பார்க்க

ஆயுதப்படைகளை கௌரவிக்கும் வகையில் ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் இசை நிகழ்ச்சி

நமோ பாரத் அன்ப்ளக்டு மியூசிகல் இரண்டாவது சீசன் வெள்ளிக்கிழமை மே 23 அன்று ஆனந்த் விஹாா் நமோ பாரத் நிலையத்தில் தொடங்குகிறது. பயணிகள் மற்றும் இசை ஆா்வலா்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6 மணிக்கு வளா்ந... மேலும் பார்க்க

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை பருவத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸ் என அதிகமாக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகும். இந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் வானம் ... மேலும் பார்க்க

கோட்லா முபாரக்பூா் கல் சந்தையில் தீ விபத்து

தில்லி கோட்லா முபாரக்பூரில் உள்ள ஒரு கல் சந்தையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், தகரக் கொட்டகையில் இருந்த குறைந்தது ஆறு கடைகள் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து தீயணைப... மேலும் பார்க்க

வழிப்பறி உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்ட இருவா் கைது

போலீஸாருடன் துப்பாக்கிச் சூடு, கொள்ளை, வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கடுமையான குற்றங்களில் தொடா்புடைய இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளிகளை தில்லி காவல்துறையினா் கைது... மேலும் பார்க்க