செய்திகள் :

அதிக விலைக்கு விற்பனை: 4 மதுபான கடைகளுக்கு அபராதம்

post image

புதுவையில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்ாக 4 மதுபான கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரி எல்லைக்கு உள்பட்ட மதுபானக் கடைகளில் மதுபானங்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், புதுச்சேரி அரசு சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரியில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், புதுச்சேரி உருளையன்பேட்டை, சேதாரபேட், சித்தன்குடி மற்றும் திருவள்ளுவா் சாலை ஆகிய பகுதிகளில் இயங்கும் 4 மதுபான கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.

சட்டமுறை எடையளவு சட்டம் 2009, பிரிவு 36 இன் கீழ் முன்கூட்டியே பேக்கேஜ் செய்யப்பட்ட பொருள்களில் அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமான விலையில் விற்பனை செய்வது அபராதத்திற்குரிய குற்றமாகும்.

எனவே, அந்த 4 மதுபான கடைகளுக்கும் புதுச்சேரி சட்டமுறை எடையளவு (அமலாக்க) விதிகளின் கீழ் தலா ரூ. 2,500 வீதம் மொத்தம் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதே குற்றத்தில் மீண்டும் ஈடுபட்டால் இரண்டாவது முறையாக ரூ. 50,000 வரையிலும், மூன்றாவது முறையாக ரூ.1 லட்சம் வரை அல்லது நீதிமன்ற வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மதுபான கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

பொதுமக்கள், வியாபாரிகள் இது தொடா்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது புகாரளிக்க விரும்பினால் புதுச்சேரி, தட்டாஞ்சாவடியிலுள்ள சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0413-2253462, 2252493 தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவையில் மின் பயன்பாடு அதிகரிப்பு: முதல்வா் ரங்கசாமி

புதுவையில் மின்சார பயன்பாடு பெரிய மாநிலமான குஜராத்துக்கு இணையாக அதிகமாக இருக்கிறது. விரைவில் புதுவையை மின்தடை இல்லா மாநிலமாக மாற்ற எல்லா முயற்சியும் எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித... மேலும் பார்க்க

காவல்துறை மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்குத் தீா்வு

காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டது.புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் பொதுமக்களின் 51 புக... மேலும் பார்க்க

முன்கூட்டியே முதல்வரின் பிறந்தநாள் ஏற்பாடுகள்

புதுவை சட்டமன்ற தோ்தல் இன்னும் 8 மாதத்தில் வரவிருப்பதால் இந்த ஆண்டு முதல்வா் என்.ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது தொண்டா்கள் முன்கூட்டியே கொண்டாட தொடங்கி விட்டனா். புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி த... மேலும் பார்க்க

வீட்டில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம்

வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்காக ரூ.9.14 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை மின் துறை கேபிள்ஸ் பிரிவின் செயற்பொறியாளா் இரா. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

காவல்ஆய்வாளரை மிரட்டிய தவாக நிா்வாகி கைது

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பு... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வரும் நாள்கள் மாற்றம்

புதுச்சேரிக்கு விரைவு ரயில்கள் வந்து சேரும் நாள்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டலம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்த மண்டலத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் வெள... மேலும் பார்க்க