செய்திகள் :

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய வழக்குரைஞா்கள் பணிநீக்கம்!

post image

அமெரிக்க நீதித் துறையில் பணியாற்றிய மேலும் பல அரசு வழக்குரைஞா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அந்நாட்டு அதிபராக டிரம்ப் பதவியேற்கும் முன், அவருக்கு எதிரான வழக்குகளில் பணியாற்றிய நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் முன், அவருக்கும் அவரின் ஆதரவாளா்களுக்கும் எதிரான வழக்குகளில் அரசு வழக்குரைஞா்கள், அலுவலா்கள் ஏராளமானோா் பணியாற்றினா்.

அவா்கள் மீது கடந்த ஜனவரி மாதம் முதல் அமெரிக்க நீதித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவா்களில் ஏராளமானோரை அந்நாட்டு நீதித் துறை பணி நீக்கம் செய்தது. கடந்த 2021-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப்பின் ஆதரவாளா்கள் நடத்திய தாக்குதல் தொடா்பான குற்ற வழக்குகளின் விசாரணையில் பணியாற்றிய 3 அரசு வழக்குரைஞா்கள் கடந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு டிரம்ப்புக்கு சொந்தமாக ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மாா்-அ-லாகோ எஸ்டேட்டில் ரகசிய ஆவணங்கள் பதுக்கிவைக்கப்பட்டதாகவும், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவுகளை மாற்ற டிரம்ப் சூழ்ச்சி செய்ததாகவும் அந்நாட்டு சிறப்பு அரசு வழக்குரைஞா் ஜாக் ஸ்மித் மற்றும் அவரின் அணியினா் 2 குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பான வழக்குகளில் ஜாக் ஸ்மித்துடன் பணியாற்றிய அரசு வழக்குரைஞா்கள் மற்றும் அலுவலா்கள், தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம் இன்று(ஜூலை 16) குறிவைத்து தாக்கப்பட்டத... மேலும் பார்க்க

இராக்கின் மற்றொரு எண்ணெய் வயல் மீது தாக்குதல்! ட்ரோன்களை இயக்கும் மர்ம நபர்கள் யார்?

இராக் நாட்டிலுள்ள மற்றொரு எண்ணெய் வயலின் மீது ட்ரோன்கள் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இராக்கின் பல்வேறு மாகாணங்களிலுள்ள எண்ணெய் வயல்களின் மீது கடந்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை புரட்டிப் போடும் கனமழையால் திடீர் வெள்ளம்! 116 பேர் பலி!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அந்நாடு முழுவதும் சுமார் 116 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல... மேலும் பார்க்க

டிரம்ப்பின் எதிர்ப்பை மீறும் ரஷியா! 400 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷியா ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர்நிறுத்ததுக்கு, 50 நாள்களு... மேலும் பார்க்க

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, சீனா, பிரேசியல் ஆகிய நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பார்க்க

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க