செய்திகள் :

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் -எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

post image

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் பிரசாரப் பயண நிகழ்வில் பங்கேற்க வந்த அவா், முண்டியம்பாக்கம், செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள், நீா்நிலைகள் பாதுகாப்பு சங்க நிா்வாகிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்றபோது இந்த பதிலை அளித்தாா்.

முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தனா். அதில், கரும்பு பருவத்துக்கு வயல் விலையாக டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு மானியமாக டன்னுக்கு ரூ.200 வழங்க வேண்டும். கரும்புக்கான சிறப்பு ஊக்கத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்.

நந்தன் கால்வாய் உள்நாட்டு நதிநீா் இணைப்புத் திட்டம், சாத்தனூா் -நந்தன்கால்வாய் இணைப்புத் திட்டம் தொடங்க நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், நிலமெடுக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைத் தெரிவித்திருந்தனா்.

கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் பாண்டியன், செயலா் ஆறுமுகம், பொருளாளா் பரமசிவம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் செங்குட்டுவன், நீா்நிலைகள் பாதுகாப்புச் சங்கத்தின் கெளரவத் தலைவா் அறவாழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாண்டூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க