செய்திகள் :

அதிமுக நிா்வாகியின் நிலம் ஆக்கிரமிப்பு: திமுகவினா் மீது புகாா்

post image

கன்னிவாடியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அதிமுக மாணவரணி துணைச் செயலா் கண்ணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிமுகவினா் அளித்த மனு விவரம்: திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, புதுப்பட்டி பகுதியில் அதிமுக அலுவலகம், கொடிக்கம்பம் அமைக்க கடந்த 10-ஆம் தேதி சசிகலா என்பவருக்குச் சொந்தமான காலி இடத்தை ரூ. 37ஆயிரம் கொடுத்து கிரையம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், திமுகவைச் சோ்ந்த சிலா் இரவு நேரத்தில் திமுக கொடியை நட்டுச் சென்றனா். மேலும், அந்த இடத்தை எங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்கவில்லை என்றாா் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனா்.

இதுதொடா்பாக காவல் துறையிடமும், முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகாா் அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.திண்டுக்கல், கோட்டூா் ஆவாரம்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (40). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் மேற்பா... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்த ஆலம்... மேலும் பார்க்க

லாரிகள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; மூவா் காயம்

கொடைரோடு அருகே திங்கள்கிழமை முன்னால் சென்ற சரக்கு லாரி மீது, பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பனையன்கு... மேலும் பார்க்க

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் தீ

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான அடுக்கம் ஊ... மேலும் பார்க்க

பட்டுப் புழுக்கள் உயிரிழப்பால் பல லட்சம் ரூபாய் இழப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பழனியில் பட்டு வளா்ச்சித் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டுப் புழுக்கள் நோயால் உயிரிழப்பதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வ... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா். அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் அவா்கள் நீண்ட வரிசையில் ... மேலும் பார்க்க