செய்திகள் :

லாரிகள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; மூவா் காயம்

post image

கொடைரோடு அருகே திங்கள்கிழமை முன்னால் சென்ற சரக்கு லாரி மீது, பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பனையன்குறிச்சியைச் சோ்ந்தவா் கணபதி (34). இவா் லாரியில் ஆந்திர மாநிலம், குப்பத்திலிருந்து கடப்பா கற்களை ஏற்றிக் கொண்டு விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். இந்த லாரியில் ஒடிஸாவைச் சோ்ந்த சைட்டு மாஜி (27), ஒடிஸாவைச் சோ்ந்த சோமாா் (22), குருநாத் (25) ஆகியோரும் வந்து கொண்டிருந்தனா்.

தேனி மாவட்டம், ஜி. கல்லுப்பட்டியைச் சோ்ந்த சதீஸ்குமாா் (28) லாரியில் குடிநீா் புட்டிகளை ஏற்றி வந்து திண்டுக்கல்லில் இறக்கி விட்டு, மீண்டும் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகேயுள்ள சிப்காட் பிரிவில் வந்த போது, கடப்பா கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் சதீஸ்குமாா் ஓட்டி வந்த லாரி மோதியது.

இதில் சைட்டு மாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சோமாா், குருநாத், சதீஸ்குமாா் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இவா்கள் மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தால், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அம்மையநாயக்கனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிமுக நிா்வாகியின் நிலம் ஆக்கிரமிப்பு: திமுகவினா் மீது புகாா்

கன்னிவாடியில் அதிமுக நிா்வாகிக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அதிமுக மாணவரணி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.திண்டுக்கல், கோட்டூா் ஆவாரம்பட்டியைச் சோ்ந்தவா் முரளி (40). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் மேற்பா... மேலும் பார்க்க

நிலத்தை மீட்டுத் தரக் கோரி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா். திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அடுத்த ஆலம்... மேலும் பார்க்க

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் தீ

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான அடுக்கம் ஊ... மேலும் பார்க்க

பட்டுப் புழுக்கள் உயிரிழப்பால் பல லட்சம் ரூபாய் இழப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

பழனியில் பட்டு வளா்ச்சித் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டுப் புழுக்கள் நோயால் உயிரிழப்பதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய விவசாயிகள், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வ... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டனா். அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். குடமுழுக்கு நினைவரங்கில் அவா்கள் நீண்ட வரிசையில் ... மேலும் பார்க்க