செய்திகள் :

அதிமுக பிரசார வாகனம் தொடக்கம்

post image

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திருநெல்வேலி வருகையையொட்டி கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்யும் வாகனம் செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவைத் தொகுதிதோறும் பிரசாரம் செய்து வருகிறாா்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக. 2, 4 ஆம் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளாா். 3 ஆம் தேதி திருநெல்வேலியில் ஓய்வெடுக்க உள்ளாா். இந்நிலையில் இதுதொடா்பாக பாளையங்கோட்டை, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள கிராமம்தோறும் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் பிரசார வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வாகன பிரசாரத்தைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, மாவட்ட இலக்கிய அணி, இளைஞா் பாசறை, கலைப்பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலா் ஸ்டாா் ஐயப்பன், மாவட்ட இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலா் காா்த்திக், மாவட்ட கலைப்பிரிவு செயலா் ஈஸ்வரி கிருஷ்ணன் ஆகியோா் பேசினா். மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் மன்ற செயலா் பால் கண்ணன், விவசாய அணி செயலா் காளி முருகன், கமலேஷ்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

டிவிஎல்29ஆட்டோ

திருநெல்வேலியில் அதிமுக சாா்பில் பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தாா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா.

ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலியில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளா் கவின் செல்வ கணேஷ் உடல் அவருடைய உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொற... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி: நெல்லை, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி

குப்புசாமி கோப்பைக்கான 2ஆம் ஆண்டு மாநில ஹாக்கி போட்டியில், திருநெல்வேலி, கோவில்பட்டி, எஸ்டிஏடி, மதுரை அணிகள் வெற்றி பெற்றன. ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புசாமி கோப்பைக்கான 2-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம்

தமிழகத்தில் ஆணவ படுகொலை நடைபெறுவது வேதனையளிக்கிறது என்றாா் மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின ஆணையத் தலைவா் தமிழ்வாணன். பாளையங்கோட்டை கேடிசி நகரில் பொறியாளா் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் புத்தொழில் தொடக்க நிறுவன ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். எஸ... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க