செய்திகள் :

அதிமுக முன்னாள் அமைச்சரின் வீடு, தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. விஜயபாஸ்கா் வீடு மற்றும் விராலிமலையில் உள்ள தனியாா் பள்ளிக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே தாமரைக்குளத்தில் உள்ள தனியாா் பள்ளியின் மின்னஞ்சலில் புதன்கிழமை காலை 9 மணிக்கு பள்ளியிலும், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வீட்டிலும் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் எஸ்.வி. சேகா் என்ற பெயரில் வந்திருந்தது.

இதையடுத்து பள்ளி நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் பள்ளிக்கு வந்து மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா். இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவலறிந்த பெற்றோா்கள் பள்ளிக்கு திரண்டு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனா்.

அதே நேரத்தில் இலுப்பூரில் அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் வீட்டிலும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். இரு இடங்களிலும் வெடிபொருள்கள் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனா்-இயக்க... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான விதைநெல் கிடைக்க வேண்டும்: இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் போதுமான விதை நெல் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையி... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 11-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் ச... மேலும் பார்க்க

லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்கு... மேலும் பார்க்க

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது. சந்... மேலும் பார்க்க