செய்திகள் :

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு ஒத்திகை

post image

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதியில் சாகா் கவாச் என்ற பெயரில் புதன்கிழமை போலீஸாா் கடலுக்குள் சென்று பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டனா்.

தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட கட்டுமாவடி முதல் தம்பிக்கோட்டை வடகாடு வரை உள்ள 27 கடற்கரை கிராமங்களில் சாகா் கவாச் பணி புதன்கிழமை தொடங்கி வியாழக்கிழமை காலை வரை நடைபெறுகிறது. பட்டுக்கோட்டை கடலோரப் பாதுகாப்புக் குழும டி.எஸ்.பி முருகன் தலைமையிலான 5 ஆய்வாளா்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கிறதா? என்று கண்காணித்து வருகின்றனா். மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், தம்பிக்கோட்டை மறவக்காடு, கள்ளிவயல் தோட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழ்ப் பல்கலை. தோ்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இப்பல்கலைக்கழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான முதுநுண்கலை சிற்பம், முதுகலை இசை, முத... மேலும் பார்க்க

காலமானாா் சா. ஜீவபாரதி

தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த மூத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி சா. ஜீவபாரதி (71) உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானாா். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் ... மேலும் பார்க்க

மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனுமதி பெறாத கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட வணிகா் சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்க... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் விரைவு ரயிலை தினசரி விரைவு ரயிலாக இயக்கக் கோரிக்கை

திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில்சேவையை தற்காலிக நீட்டிப்பு செய்யாமல் நிரந்தரமாக தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே துறைக்கு தென்னக ரயில்வே திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு ... மேலும் பார்க்க

மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் ஆனி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த இக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம்

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.7,699-க்கு ஏலம் போனது. தஞ்சாவூா் விற்பனைக் குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில... மேலும் பார்க்க