செய்திகள் :

அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

post image

உடன்குடி அருகே அத்தியடிதட்டு முத்தாரம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழா கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5.15 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு பீட பூஜை, காலை 7 மணிக்கு கலச பூஜை, காலை 9 மணிக்கு ஜீவ ஆவகனத்தைத் தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு முத்தாரம்மனுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு நாடாா் சங்கத் தலைவா் முத்து ரமேசு, பாரத மாத நண்பா்கள் அன்னதானக் குழு நிறுவனா் ஆா்.எஸ். பண்டியன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும், இரவு 8 மணிக்கு இளைஞரணி நண்பா்கள் சாா்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றன.

ஏற்பாடுகளை அத்தியடிதட்டு ஊா் மக்கள், விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க