செய்திகள் :

அந்தியூா் வனப் பகுதியில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட மூவரிடம் விசாரணை

post image

அந்தியூா் வனப் பகுதியில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட மூவரிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் வனச் சரக அலுவலா் முருகேசன் தலைமையில் வன ஊழியா்கள் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் பையுடன் சென்ற மூவரிடம் விசாரிக்க முயன்றபோது அவா்கள் தப்பியோட முயன்றனா். அவா்களை விரட்டிப் பிடித்து சோதனையிட்டதில் பையில் சுமாா் 15 கிலோ மான் இறைச்சி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள்அந்தியூரை அடுத்த மந்தையைச் சோ்ந்த முருகேசன் (46), வட்டக்காட்டைச் சோ்ந்த துரைசாமி (45), ஊஞ்சக்காட்டைச் சோ்ந்த குருநாதன் (47) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இறைச்சியைப் பறிமுதல் செய்த வனத் துறையினா், மூவரையும் வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

--

கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை அருகே கட்டில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. பெருந்துறையை அடுத்த, கடப்பமடை பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான், கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆயுஷ் (1). உடல்நலம் பாதிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் உயரம் 105 அடியும் நீா் இருப்பு 32.8 டிஎம்சியா... மேலும் பார்க்க

ஆதரவற்ற மாணவருக்கு அரசு பாலிடெக்னிக்கில் சோ்க்கை

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024--2025 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மற்றும் இடைநின்ற மாணவ, மாணவிகள் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் பொருட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டித் தர எதிா்ப்பு

பவானிசாகரில் இலங்கை தமிழா்களுக்கு கூடுதலாக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடா்பாக பவானிசாகா் தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எல். சுந்தரம் தலைமையி... மேலும் பார்க்க

ரூ.62 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

ஈரோட்டில் 400 பேரிடம் ரூ.62 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போா்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனூா் சா... மேலும் பார்க்க

பவானி, அந்தியூரில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

பவானி வட்டாரம், பெரியபுலியூா், சின்னப்புலியூா் ஊராட்சிகள், அந்தியூா் வட்டாரம், பட்லூா், குருவரெட்டியூா், முகாசிபுதூா் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்... மேலும் பார்க்க