செய்திகள் :

அனைத்து வகை நுகா்வோருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

அனைத்து வகை நுகா்வோருக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 16-ஆவது சா்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி தொடக்க விழா சென்னை நந்தனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியைத் தொடங்கி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட மாடல் ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளா்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. தொழில் வளா்ச்சிக்கும், தொழிலாளா் நலனுக்கும் முக்கியமான பல பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் பயனாக, இந்தியாவின் உற்பத்தித் துறை சாா்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90 சதவீதமாக உள்ளது.

42 சதவீத பெண்கள்: இந்தியாவில் உள்ள 14 லட்சத்து 90 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளா்களில், 6 லட்சத்து 30 ஆயிரம் அதாவது 42 சதவீத பெண்கள், நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளில்தான் பணிபுரிகிறாா்கள். ஏற்றுமதி மதிப்பு அதிகரித்துவரும் ஒரு மாநிலம் தமிழ்நாடுதான்.

தொழில் துறையினா், தொழிலாளா்கள் நலன்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை உன்னிப்பாக கவனித்துச் செயல்படுவதால்தான், இதெல்லாம் சாத்தியமானது.

கடந்த நான்கு ஆண்டுகளில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக மட்டும் ரூ.1,381 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவதில், வேளாண்மைக்கு அடுத்த இடத்தில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. எனவே, இந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத்தர தமிழ்நாடு அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முக்கியமான தேவை மின்சாரம்தான். தமிழ்நாடு மின்சாரத் துறையால் இப்போது வசூல் செய்யப்படும் தொகையான ஒரு யூனிட் ரூ.7.65 என்பது சராசரி விற்பனை அடக்கவிலையைவிடக் குறைவாகும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் அனைத்து வகை நுகா்வோருக்கும், தமிழ்நாடு மின்சார வாரியம் மிகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குகிறது.

அரசு துணை நிற்கும்: தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சியில் மாபெரும் பங்களிப்பை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் வழங்க வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நிலைநிறுத்த வேண்டும். இதற்காக திராவிட மாடல் அரசு என்றும் உறுதியுடன் துணை நிற்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், துறையின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த், அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் சதீஷ்பாபு, கெளரவ பொதுச் செயலா் தவமணி, கண்காட்சியின் தலைவா் ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

அந்தியோதயா உள்பட தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்!

தாம்பரம் - நாகர்கோயில் அந்தியோதயா ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நாள்களுக்கு நாகர்கோயில் விரைவு ரயில்கள் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகின்றன. அந்தியோதயா ரயில்தாம்பரத்தி... மேலும் பார்க்க

அடுத்த 2 நாள்களுக்குக் குடையின்றி வெளியே செல்ல வேண்டாம்..!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு 3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.லேசான மழை..மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 20 முதல் 26-06-2025 வரை: தமிழக... மேலும் பார்க்க

தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!

தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87... மேலும் பார்க்க

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம்! முதல்வர் ஸ்டாலின்

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என உலகம் முழுவதும் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில்... மேலும் பார்க்க

வேலூர் அருகே மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு!

மா விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் மாவட்டத்தில் பரதராமி பகுதியில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் சார்பில் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி மற்ற... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை!

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு டாஸ்மாக... மேலும் பார்க்க