செய்திகள் :

அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார்.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் முகவர்கள் மாநாட்டு மேடையில் அமித் ஷாவுக்குப் பொன்னாடை அணிவித்துக் கட்சியில் அவர் இணைந்தார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். திமுக தலைவர் மு. கருணாநிதி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலர் வைகோ போன்றோருடன் நெருக்கமாக இருந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.

திருநெல்வேலி, தச்சநல்லூா் அருகே நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உரையாற்றினார்.

ஸ்டாலின் அண்ணாச்சி, உங்கள் வாக்குறுதி என்னாச்சி? நயினார் நாகேந்திரன் அடுக்கிய கேள்விகள்!

இந்த மாநாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பூத் கமிட்டிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 7 இடங்களில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இதன்படி, முதல் மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Former DMK MP K.S. Radhakrishnan joined the BJP on Friday in the presence of Union Home Minister Amit Shah.

கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: தமிழிசை கண்டனம்!

கேரளத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் அதனை அவர் ஏற்றுக்கொண்டதற்கும் பாஜக மூத்த தலைவர் ... மேலும் பார்க்க

விஜய் பக்குவப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தொண்டர்கள் பக்குவப்பட்டதைப்போன்று தெரிகிறது, ஆனால், விஜய் இன்னும் பக்குவப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்துவிட்டோ... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பாஜக ... மேலும் பார்க்க

ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க வழங்கப்பட்ட சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெவித்துள்ளார். இதுகுற... மேலும் பார்க்க

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி!

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை, தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மருதாச்சலம், முருகன், சதீஷ் மற்றும் ர... மேலும் பார்க்க

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும... மேலும் பார்க்க