செய்திகள் :

அமெரிக்கப் பெண்ணை இந்து முறைப்படி மணமுடித்த கீழையப்பட்டி இளைஞா்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞருக்கும், அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

கீழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கரு. முருகானந்தம்-சாந்தி தம்பதியரின் மூத்த மகன் பிரபு முருகானந்தம். பொறியாளரான இவா், அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், சிறையிலிருந்து விடுதலையானவா்கள் குறித்து, கரோனா காலகட்டத்தில் ‘இன் த பிகினிங்’ என்ற குறும்படத்தை இயக்கினாா். தொடா்ந்து பல திரைப்பட விழாக்களுக்கும் சென்று வந்தாா். அப்போது, அமெரிக்காவின் உட்லேண்ட் வாஷிங்டன் மாகாணத்தைச் சோ்ந்த பிரெயன்ரேல்-கிறிஸ்டினா ராபின்ஸ்சன் தம்பதியரின் மகளும் நடனக் கலைஞருமான கரினாரேலைச் சந்தித்தாா்.

சினிமா, கலை, இலக்கியம், தத்துவம் போன்றவற்றில் இருவருக்கும் ஒருமித்த கருத்து இருந்ததால் இருவரும் விரும்பினா். பின்னா், தங்களுடைய திருமணத்துக்காகப் பெற்றோரின் சம்மதத்தைக் கோரினா்.

இரு வீட்டாரும் சம்மதிக்கவே கீழையப்பட்டியில் உள்ள விநாயகா் மண்டபத்தில் பிரபு முருகானந்தத்துக்கும், கரினாரேலுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்காக மணப்பெண்ணின் உறவினா்கள் 20-க்கும் மேற்பட்டோா் அமெரிக்காவிலிருந்து வந்து வாழ்த்தினா்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். இளையான்குடி பேரூராட்சிக் க... மேலும் பார்க்க

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நாச்சியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.நாச்சியாபுரம் அருகேயுள்ள தட்டட்டி பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்கள், பெற்றோா் போராட்டம்

சிவகங்கை அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அருகேயுள்ள சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 238 மாணவா்கள... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாருக்கு ஜூலை 29 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப்படை போலீஸாா் 5 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, திருப்புவனம்... மேலும் பார்க்க