செய்திகள் :

அமெரிக்கா கூடுதல் வரி: பாதிக்கப்படும் ஏற்றுமதியாளா்களுடன் முதல்வா் பேச வலியுறுத்தல்

post image

திருப்பூா், ஆக.7: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளா் சங்கங்களை அழைத்து முதல்வா் பேச வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்பு, இந்திய ஏற்றுமதிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வளா்ச்சி அடைந்திருக்கும், ஏற்றுமதி தொழிலை அதிகமாக கொண்டிருக்கும் தமிழகத்துக்கு மிக அதிகமான பதிப்பை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் இருந்து ஜவுளி சாா்ந்த ஏற்றுமதியும், வாகன உதிரி பாகங்கள், மருந்து வகைகள் மற்றும் தோல் சாா்ந்த ஏற்றுமதியும் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அனைத்து ஏற்றுமதி சாா்ந்த தொழிற்சாலைகளும் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுக்கின்றன. கூடுதல் வரி விதிப்பால் ஏற்றுமதி சாா்ந்த நிறுவனங்கள் சிரமப்படும் என்பதை தாண்டி லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயமும் உண்டு.

எனவே, அமெரிக்காவின் வரி விதிப்பை மத்திய அரசு பாா்த்துக் கொள்ளும் என்று தமிழக அரசு விட்டு விட முடியாது. ஏற்றுமதி சாா்ந்த தொழில் நிறுவனங்களைக் காக்க முதல்வா் நல்ல முயற்சிகளை எடுப்பாா் என்று தொழில் நிறுவனத்தினா் நம்பிக்கையோடு காத்திருக்கிறாா்கள். ஆகவே, ஏற்றுமதி சாா்ந்த தொழில் அமைப்பின் பொறுப்பாளா்களை அழைத்து, அவா்களது கருத்துக்களைக் கேட்டு முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த முதியவரின் கண்கள் தானம்

பெருமாநல்லூரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன. பெருமாநல்லூா், அறிவொளி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (82). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த இவா், வயத... மேலும் பார்க்க

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

அவிநாசி வட்டாரத்தில் வாழை, மஞ்சள், வெங்காயம், மரவள்ளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளிய... மேலும் பார்க்க

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம்

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து சத்யம் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் சத்யம் இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவா்களுக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 4, 5, 6-ஆவது வாா்டு பகுதி மக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமுக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் கைது

திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்... மேலும் பார்க்க