செய்திகள் :

அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

post image

அமெரிக்காவின் தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் கடுமையான போர் நடைபெற்று வந்தது. பின்னர், அந்தப் போரானது 12-வது நாளை எட்டிய நிலையில் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஜூன் 25) அறிவித்தார்.

இந்தப் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானிலுள்ள 3 அணுசக்தி தளவாடங்கள் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில், ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதை, ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய் இன்று (ஜூன் 25) உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், “எங்களது அணுசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதை உறுதியாகச் சொல்லலாம்” எனக் கூறியுள்ளார். இருப்பினும், அணுசக்தி தளவாடங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்து விரிவானத் தகவல்கள் ஈரான் தரப்பில் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி தளவாடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (உளவுத்துறை) வெளியிட்ட அறிக்கையை, அதிபர் டிரம்ப் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்துறை பரபரப்பு தகவல்

அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்தவாரம் பேச்சுவார்த்தை: டிரம்ப்

ஈரானுடன் அடுத்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 25) தெரிவித்தார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால், தடைபட்டிருந்த பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான்..அணு ஆயுதப்போரை நிறுத்தியுள்ளோம்! மீண்டும் சீண்டும் அதிபர் டிரம்ப்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை வர்த்தகத்தைக் காரணமாகக் கூறி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதி... மேலும் பார்க்க

அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!

2019ஆம் ஆண்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும் அந்நாட்... மேலும் பார்க்க

அணுகுண்டுகளைத் தாங்கும் போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!

அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்... மேலும் பார்க்க

ஈரான், பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! 7000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், அகதிகளாக வசித்த சுமார் 7000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் நடைபெற்று வரும... மேலும் பார்க்க