செய்திகள் :

அமெரிக்க துணை அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி!

post image

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 21) சந்தித்தார்.

தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்துக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற ஜே.டி. வான்ஸை பிரதமர் வரவேற்றார்.

இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வணிக ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் அவர்களின் பேச்சுவார்த்தைகளில் முதன்மையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் 4 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமான நிலையத்தில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரின் குடும்பத்தாரை வரவேற்றார். வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், குழந்தைகள் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.

துணை அதிபருக்கு விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க | இந்திய பாரம்பரிய உடையில் அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகள்!

ஜாா்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். இதுதொடா்பாக மாநில காவல் துறை டிஜிபி அநுராக் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கூறியதாவது: பொக்காரோ மாவட்டம்... மேலும் பார்க்க

உயர்தர போலி ரூ.500 நோட்டு.. மத்திய உள்விவகாரத் துறை எச்சரிக்கை!

மிக நவீனமான உயர்தர போலி ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய உள்விவகாரத் துறை எச்சரித்துள்ளது.அச்சடிக்கப்பட்டிருக்கும் விதம், போலி ரூபாய் நோட... மேலும் பார்க்க

இரக்கம், எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் போப் பிரான்சிஸ்! - பிரதமர் மோடி இரங்கல்

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்(88) இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்க... மேலும் பார்க்க

முன்னாள் டிஜிபி கொலை: விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்- கர்நாடக அமைச்சர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காவல்துறை டிஜிபி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திய பிறகே, உண்மை என்னவென்று தெரியவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார... மேலும் பார்க்க

இந்திய பாரம்பரிய உடையில் அமெரிக்க துணை அதிபரின் குழந்தைகள்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் வருகைதந்திருக்கும் அவரது மூன்று குழந்தைகளும் பாரம்பரிய உடை அணிந்துள்ளனர்.நான்கு நாள்கள் பயணமாக இந்தியா வருகைதந்துள்ள அமெரிக்க து... மேலும் பார்க்க

மகாராஷ்டிரப் பள்ளிகளில் ஹிந்தி சேர்ப்பு: மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு!

மகாராஷ்டிரத்தில் பள்ளிகளில் 3 ஆவது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளதற்கு அந்த மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மராத்தி மற்றும் ஆ... மேலும் பார்க்க