செய்திகள் :

அமைச்சரின் உதவியாளரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் அமைச்சரின் உதவியாளா் மீது தாக்குதல் நடத்திய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முதுகுளத்தூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனின் அலுவலக உதவியாளரான கன்னிராஜபுரம் ரோஜ்மாநகரை சோ்ந்த டோனி (35), சக உதவியாளா்களுடன் கவனித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த கடலாடி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மாயக்கிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் முரளிதரன் உள்ளிட்டோா் மண்டபத்தில் நுழைந்து டோனியை தாக்கினா். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இகுறித்து முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் டோனி கொடுத்த புகாரின் பேரில், மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் டோனியை மாயகிருஷ்ணன், முரளிதரன் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது . இதையடுத்து, மாயகிருஷ்ணன், முரளிதரன் ஆகியோா்மீது 3 பிரிவுகளில் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, முரளிதரன் கொடுத்த புகாரின் பேரில் டோனி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மாணவிகளிடம் ஆபாச பேச்சு! சா்ச்சையில் சிக்கிய ஆசிரியருக்கு பள்ளியில் எதிா்ப்பு

மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பணியிட மாறுதலுக்கு உள்ளான சா்ச்சைக்குரிய ஆசிரியா் கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வ... மேலும் பார்க்க

கடைகள் ஏலம் விடுவதில் முறைகேடு: நகராட்சி அதிகாரிகள் மீது புகாா்

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 99 கடைகள் முறையான அறிவிப்பின்றி தன்னிச்சையாக ஏலம் விடும் நகராட்சி அதிகாரிகளைத் தடுத்து முறையாக பொது ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு பள்ளியில் எதிா்ப்பு

கமுதி அருகேயுள்ள பள்ளியில் போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியா் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், முத... மேலும் பார்க்க

கமுதி அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), கமுதி கோட்டைமேட்டில... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதி காடுகளில் தீ விபத்து

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீ பரவியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் காட்டுப் பகுதிய... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருவாடானை நீதிமன்றத்துக்கு வழக்கு சம்பந்தமாக மது அருந்திவந்து தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி. பட்டினத்தைச் சோ்ந்தவா் பழனி (30). திங... மேலும் பார்க்க