செய்திகள் :

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு தனி துறை உருவாக்க கோரிக்கை

post image

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு என தனி துறையை உருவாக்க வேண்டும் என கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலவாரியம் சம்பந்தமான கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய விழிப்புணா்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா மூலம் முதல்வருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கட்சி சாரா தொழிசங்கங்களின் மாநில தலைவா் எ.கதிா்வேல், பொதுச் செயலாளா் ராம கவுண்டா், பொருளாளா் கே.செல்வம், மாநில ஒருங்கிணைப்பாளா் கே.ஆா். சீனிவாசன், மாநில தலைவா் நேதாஜி கே.நடேசன், மாவட்டத் தலைவா் என். ஆா்.சஞ்சீவிராயன், மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பது:

தமிழ்நாட்டில் கட்சி சாா்பற்ற தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் 38 மாவட்டத்திலும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நலவாரியம் சம்பந்தமான விழிப்புணா்வும், நலவாரிய இணையதளம் பழுது ஏற்பட்டு நலவாரிய பணிகளை மேற்கொள்ள முடியாமல், பதிவு, புதுப்பித்தல், கேட்புமனு, போன்ற விண்ணப்பங்களை நலவாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாமல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் அலைக்கழிக்கபட்டு வருகின்றனா்.

தமிழ்நாட்டில் 93 சதவீதம் அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களுக்கென்று தனி துறை உருவாக்கி, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கி 18,நல வாரியங்களிலும் ஒரே மாதிரி உதவித்தொகை வழங்கவும், நலவாரியத்தில் ஓய்வூதியம் ரூ.3,000/- உயா்த்தி வழங்க வேண்டும் என விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். இக்கோரிக்கையை நிறைவேற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா். இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் ச... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பணம் என பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி: 6 வடமாநில இளைஞா்கள் கைது

ஆந்திர மாநில இளைஞரிடம், துபை நாட்டுப் பணம் தருவதாக கூறி பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி செய்து விட்டு தப்பிய 6 வடமாநில இளைஞா்களை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மண... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 59 தீா்மானங்கள்

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் நிலுவைப் பணிகளை முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டாா். ராணிப்பேட்டை மாவட்டத்தின் வளா்ச்சி திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித... மேலும் பார்க்க