செய்திகள் :

அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம்: சென்னையில் இன்று தொடக்கம்

post image

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களைக் கட்டணமின்றி அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்கி வைக்கவுள்ளாா்.

ஆடி மாதத்தில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு நிகழாண்டு 2 ஆயிரம் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்படுவா் என தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 60 முதல் 70 வயதுக்குள்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி அரசு நிதியில் சென்னை, தஞ்சாவூா், மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு 5 பயணத் திட்டங்களாக ஜூலை 18, 25, ஆகஸ்ட் 1, 8, 15 ஆகிய தேதிகளில் அழைத்துச் செல்லப்படுவா்.

இதைச் செயல்படுத்தும் வகையில் முதல்கட்ட ஆன்மிகப் பயணத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திருவொற்றியூா் வடிவுடையம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

இந்தக் குழுவினருக்கு திருவொற்றியூா் வடிவுடையம்மன், பாரிமுனை காளிகாம்பாள், மயிலாப்பூா் கற்பகாம்பாள், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன் ஆகிய திருக்கோயில்களில் சிறப்பு தரிசனமும், மதிய உணவும் வழங்கப்படும்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க