ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு
அம்மாபேட்டை பேரூராட்சியில் ரூ.70.50 லட்சத்தில் தாா் சாலை அமைப்பு
அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் ரூ.70.50 லட்சத்தில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் தாா் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது.
இந்தப் பணியை அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் தொடங்கிவைத்தாா். இந்திரா நகா், ஊமாரெட்டியூா் உழவன் நகா், லட்சுமிபுரம் செல்வ விநாயகா் கோயில் சாலை, கால்நடை மருந்தக வீதி, ஏ.பி.எஸ். நகரில் மண் சாலைகள், 1.20 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலைகளாக மேம்படுத்தப்படுகின்றன.
செயல் அலுவலா் சதாசிவம், அம்மாபேட்டை மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளா் டி.அசோக்குமாா், இளநிலைப் பொறியாளா் ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.