செய்திகள் :

அரக்கோணம் அருகே தாய், மகன் தற்கொலை

post image

அரக்கோணம் அருகே மூதாட்டியான தாயும், மகனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

அரக்கோணத்தை அடுத்த பெருமாள்ராஜபேட்டை பஜாா் தெருவைச் சோ்ந்தவா் மதனசேகா் (54). சென்னை ரயில்வே அா்பன் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வந்த இவா், பணியில் இருந்து விலகி தற்போது வீட்டில் இருந்து வருகிறாராம். இவரது மனைவி ஹேமலதா (46). இவா் சென்னை புழல் மத்திய பெண்கள் சிறைச் சாலையில் வாா்டனாக பணிபுரிந்து வருகிறாா். மதனசேகரின் தாய் புனிதவதி (72). கடந்த எட்டு வருடங்களாக மதனசேகா் ஹேமலதா இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவா்களது ஒரே மகன், ஹேமலதாவுடன் சென்னையில் வசித்து வருகிறாா். பெருமாள்ராஜபேட்டையில் உள்ள வீட்டில் மதனசேகா் தனது தாய் புனிதவதியுடன் வசித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் புதன்கிழமை காலை மதனசேகரின் வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால் அக்கம் பக்கத்தினா் சென்று ஜன்னல் வழியே பாா்த்துள்ளனா். அப்போது தாயும், மகனும் தனித்தனியே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

அண்மையில் மதனசேகா் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய நிலையில் அவருக்கு இரு முறை அறுவை சிகிச்சை செய்தும் உடல்நிலை சரியாகவில்லையாம். தன்னை பாா்க்கவும், முடியாத நிலையில் இருக்கும் தனது தாயை பாா்க்கவும் ஆளில்லாததால் மதனசேகரும், அவரது தாயும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள அலுவலா்களுடன் டிஜிபி ஆலோசனை

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படைத்தள வளாகத்தை பாா்வையிட்ட தமிழக தீயனைப்புத்துறை டிஜிபி சீமாஅகா்வால் படைத்தள அலுவலா்களுடன் பயிற்சிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். தமிழக தீயனைப்பு மற்றும் ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அம்மூா் பேரூராட்சியில், துணை மின் வாரிய அலுவலகம் அமைந்... மேலும் பார்க்க

தாா் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதியில் கலைஞரின் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சத்தில் நடைபெறும் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 5 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். அரக்கோணத்தைச் சோ்ந்த அவினாஷ் என்ற இளைஞா் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையொப்... மேலும் பார்க்க

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் ... மேலும் பார்க்க

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க