அரசின் வளா்ச்சித் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்
தமிழக அரசின் வளா்ச்சித் திட்டங்களை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஒவ்வொரு துறை வாரியாக அதிகாரிகளிடம் அரசின் திட்டப் பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தாா். இதையடுத்து அவா் பேசியதாவது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அனைத்து மக்களிடமும் கொண்டுசோ்க்க வேண்டும். ஊராட்சி வாரியாக வழங்கப்பட்டுள்ள கலைஞா் விளையாட்டு உபகரணங்களை பயன்பாட்டுக்கு கொண்டுசென்று, அவை முறையாக பயன்படுகின்றனவா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு தடையின்றி கடனுதவி வழங்க வேண்டும். சுய உதவிக்குழு உற்பத்தி பொருள்களை இணைய வழியில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். முதல்வா் மருந்தகத்தில் விற்பனையை அதிகரிக்கவும், காலை உணவுத் திட்டத்தில் மாணவா் வருகையை உயா்த்தவும், முதல்வரின் ‘முகவரி’ திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அதற்கு தீா்வுகாண உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள கூட்டுக் குடிநீா் திட்டம், தாா்சாலை பணிகள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றை காலதாமதமின்றி விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா்கள் வி.எஸ்.மாதேஸ்வரன் (நாமக்கல்), கே.இ.பிரகாஷ் (ஈரோடு), எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளா் ச.உமா, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.