செய்திகள் :

அரசியல் கட்சியை தோ்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரை

post image

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியை தோ்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியத் தோ்தல் ஆணையம் 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கான பொதுத்தோ்தல் அல்லது இடைத்தோ்தல்களில் எதிலும் போட்டியிடாத கட்சிகளையும், இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளையும் நீக்குவதன் மூலம் அரசியல் அமைப்பை செழுமைப்படுத்தும் நோக்கத்துக்காக பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்க இந்தியத் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி ஈரோடு மாவட்டம் பவானி வட்டம், கதவு எண் 95, காவேரி வீதி என்ற முகவரியில் இயங்கி வந்த பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியானது கடந்த 7.8.2022 அன்று அவசர கால செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில் அக்கட்சியை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி பட்டியலிருந்து நீக்கம் செய்யக்கோரி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்பேரில் தற்போதைய இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின் பேரிலும், கட்சியின் முடிவின்படியும் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய தலைமை தோ்தல் அலுவலா் மூலமாக இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: பவானிசாகா் தொகுதியில் ஆட்சியா் ஆய்வு

பவானிசாகா் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் பேரூராட்சி, புன்செய... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது வழக்கு

இளைஞரை தாக்கி பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கரூா் மாவட்டம், நொய்யல், அண்ணா நகரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ஜெகதீசன்(30). இவா், பெருந்துறையிலுள்ள ஒரு த... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, 102 தேங்காய்ப்பருப்பு மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல்தர தேங்காய்ப... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டம் தொடக்கம்

மொடக்குறிச்சியில் வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு எம்பி கே.ஈ.பிரகாஷ் தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி வேளா... மேலும் பார்க்க