செய்திகள் :

அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்: அண்ணாமலை என்ன சொல்கிறார்!

post image

பெஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நமது தலைவர்கள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூரு வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் அண்ணாமலை.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது அவர் கூறுகையில்,

”காஷ்மீரில் மிகவும் துயரமான நிகழ்வு நடந்துள்ளது. தமிழ்நாடு கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களைச் சேர்ந்த நடுத்தர மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவருமே அங்கு சுற்றுலா சென்று இருந்தனர். இந்த நிலையில் திட்டமிட்டு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்,

நம்முடைய அரசு கொடுக்கும் பதிலடி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மக்கள் ஆக்ரோஷமான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிடுகின்றனர். அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும், அரசும் அரசு இயந்திரங்களும் தகுந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்,

இந்த விவகாரத்தில் அரசியல் பேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற அன்றுகூட பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளை பொறுத்தவரை இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும், அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.

காஷ்மீரில் 370 என்ற சட்டப்பிரிவை எடுத்த பிறகும் அனைத்தும் கட்டுக்குள்தான் இருக்கிறது, துரதிர்ஷ்டவசமாக தாக்குதல் நடந்துள்ளது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அரசு இயந்திரங்கள் விரைவில் பதில் அளிக்கும். இதில் நமது தலைவர்கள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்,

தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் காலம் காலமாக சண்டை நடந்து வருகிறது. பாதுகாப்புப் படை அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஆனால் தற்போது பல நாள்கள் கழித்து அப்பாவி மக்கள்களை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது, தீவிரவாதம் முற்றிலும் வேரோடு அறுக்கப்பட வேண்டும். நிச்சயம் அது நடக்கும்.

இறந்தவர்கள் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் அரசு தெரிவிக்கும்.

நான் உள்துறை இணை அமைச்சராக ஆகவில்லை, நான் உங்களோடுதான் இருக்கிறேன்” இவ்வாறு கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

ஏப். 25 முதல் கோடை விடுமுறை! ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் ஏப். 25 முதல் கோடை விடுமுறை தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடு... மேலும் பார்க்க

அமித் ஷா பதவி விலக வேண்டும்: தொல். திருமாவளவன்

பெஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பெஹல்காமில் உள்ள பைச... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்... மேலும் பார்க்க

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற... மேலும் பார்க்க

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்: முதல்வர்

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக புத்தக நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினின் தன்னுடைய எக்ஸ் தளப... மேலும் பார்க்க