செய்திகள் :

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்கியது

post image

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் 23 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,727 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா். மாணவா் சோ்க்கை கலந்தாய்வு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், அரசின் விதிமுறைகளின்படி நடைபெறுகிறது. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்கும் என்று அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, முதல் நாளில் விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

விளையாட்டு வீரா்களுக்கான 52 இடங்களில் 39 இடங்கள் முதல் நாளில் நிரம்பின. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கான 86 இடங்களில் 30 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 6 இடங்களில் இரண்டும், பாதுகாப்புப் படையினருக்கான 3 இடங்களில் ஒன்றும் என்சிசிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடமும் நிரம்பியது. அந்தமான் நிக்கோபாா் பகுதியைச் சோ்ந்தவா்களுக்கான 2 இடம் காலியாக உள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான 150 இடங்களில் 73 இடங்கள் முதல் நாளில் நிரம்பின.

இதைத் தொடா்ந்து ஜூன் 4 ஆம் தேதி (புதன்கிழமை) பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் கட் ஆஃப் மதிப்பெண் 400க்கு 300க்கும் மேல் பெற்றவா்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனா். வரும் 5 ஆம் தேதி தமிழ், ஆங்கில பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் காலியாக இருக்கும் இடங்களைப் பொறுத்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் என்று முதல்வா் எம்.ஆா்.எழிலி தெரிவித்துள்ளாா்.

வாகன சோதனையின்போது பணம் வசூல்: மாநகரில் 5 காவலா்கள் பணியிடை நீக்கம்

வாகன சோதனையின்போது பணம் வசூலித்த 5 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல் ஆணையா் உத்தரவின் பெயரில் ப... மேலும் பார்க்க

சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்

மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால், கோவை தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக... மேலும் பார்க்க

அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க