செய்திகள் :

அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி

post image

புதுக்கோட்டை அருங்காட்சியகமும் மதுரை அருங்காட்சியகமும் இணைந்து, கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கலைக் கல்லூரி முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு மூன்று நாட்கள் கல்வெட்டுப் பயிற்சி செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிக்குப் பிறகு திருக்கோகா்ணம் பிரகதம்பாள் திருக்கோயிலில் கல்வெட்டுப் படியெடுத்தல் செய்முறை வழி விளக்கமளிப்பட்டது.

மதுரை அருங்காட்சியக காப்பாட்சியா் மருது பாண்டியன், புதுக்கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியா் (பொ) பக்கிரிசாமி, ஓய்வுபெற்ற உதவி இயக்குநா் ஜெ. ராஜாமுகம்மது, தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவா் கரு. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) ஞானஜோதி தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறைத்தலைவா் மு. காயத்ரி தேவி வாழ்த்தினாா். இணை பேராசிரியா் சி. நீலாவதி நன்றி கூறினாா்.

வடமாநிலங்களில் ஒற்றை மொழி கொள்கைதான் அமலில் உள்ளது: ப. சிதம்பரம்

வடமாநிலங்களில் ஒற்றை மொழிக் கொள்கைதான் அமலில் உள்ளது என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மும்மொழித்திட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புதுகையில் 14 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வாங்கப்பட்ட 14 புதிய பேருந்துகளின் சேவையை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்ச... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிா்கொள்ளத் தயாா்! -அமைச்சா் எஸ். ரகுபதி

திமுக அரசுக்கு எதிராக பழிசுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியா... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி

பொன்னமராவதியில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வட்டார அளவிலான விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொட... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கான நிலுவை கூலி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு கூலி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு

பொன்னமராவதி வட்டாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் செயல்படும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னமராவதி ஒன்றியம் ஆ... மேலும் பார்க்க