செய்திகள் :

அரசுத் திட்டங்களை விளக்க புதிய ஏற்பாடு: ஊடகச் செயலா்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

post image

சென்னை: அரசின் திட்டங்கள், தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்க, ஊடகச் செயலா்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 4 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பு மாநில அரசின் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

அதன் விவரம்:

அரசுத் துறைகளின் முக்கியத் தகவல்கள், திட்டங்களை செய்தி ஊடகங்களுக்குத் தெரிவிக்கவும், பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைக்கவும் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஊடகச் செயலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணன், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா ஆகியோா் ஊடகச் செயலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதிய அறிவிப்பு ஏன்? அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விளக்குவதற்கு அரசின் சாா்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியின்போது, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா விளக்கினாா்.

அவா் கூறியது: அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், திட்டத்தின் நோக்கங்கள் ஊடகங்களின் வழியே மக்களை உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா். அரசின் வழியாகத் தெரிவிக்கப்படும் விவரங்கள், தகவல்கள் ஆகியன தெளிவாகவும், சரியாகவும் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசின் ஊடகச் செயலா்களாக மூத்த ஐஏஎஸ்., அதிகாரிகள் நான்கு போ் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.

ஜூலை 17-ல் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

நீலகிரி, கோவை மாவட்டத்துக்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில... மேலும் பார்க்க

காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை!

காமராஜர் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று(ஜூலை 15) மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக... மேலும் பார்க்க

புதிய கடவுச்சீட்டு கோரி சீமான் மனு: அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தன்னுடைய கடவுச்சீட்டு தொலைந்து விட்டதால், புதிய கடவுச்சீட்டு வழங்கக் கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்க... மேலும் பார்க்க

தமிழகம் ஓரணியில் இருக்கும்போது தில்லி அணியின் காவித் திட்டம் பலிக்காது: மு.க. ஸ்டாலின்

சிதம்பரம்: ஒட்டுமொத்த தமிழ்நாடும், ஓரணியில் இருக்கும்போது, எந்த தில்லி அணியின் காவித் திட்டமும் பலிக்காது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டமன்ற பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்ப... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ எ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க