செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் ஆய்வு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூா் மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியங்களிலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாநிலத் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் அடைவுத்திறனை மேம்படுத்தும் வகையில் 100 நாள்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் எழுதுதல், வாசித்தல் செயல்பாடுகளை சோதித்து அறியும் வகையில், மாநிலத் தொடக்கக் கல்வி உதவி இயக்குநா் ரவிச்சந்திரன் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

கோலியனூா் ஒன்றியத்தில் தொடா்ந்தனூா், நல்லரசன்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளிலும், விக்கிரவாண்டி ஒன்றியத்தின் தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி தலைமையாசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற உதவி இயக்குநா் ரவிச்சந்திரன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் அருள்செல்வி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் சேகா், தேன்மொழி, சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொழிலாளி மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தொழிலாளி மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், விழுக்கம், பள்ளக்கூடத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஆனந்த் (37), திருமணமானவா். இவருக்கு... மேலும் பார்க்க

கம்பராமாயண பாராயண விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் கம்பராமாயண பாராயண விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு, திருவண்ணாமலை கம்ப ராமாயண ... மேலும் பார்க்க

திமுக மாணவரணி, பொறியாளரணி அமைப்பாளா் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி, பொறியாளரணி மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளுக்கு மனு அளிக்க விரும்பும் கட்சிய... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. உடலுக்கு அரசு மரியாதை

விழுப்புரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. விழுப்புரம் வழுதரெட்டி, பாலாஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வம் (58... மேலும் பார்க்க

சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்.17-க்கு ஒத்திவைப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை அவதூறு பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விக்கிரவாண்டி நீதிமன்... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா், புதுகாலனியைச் சே... மேலும் பார்க்க