செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 4 லட்சத்தை கடந்தது: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி (ஜூலை 30) 4 லட்சத்து 364-ஆக உள்ளது. ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழியில் 2,11, 563 மாணவா்களும், ஆங்கில வழியில் 63,896 மாணவா்களும், 2 முதல் 8-ஆம் வகுப்பு வரை 92,098 மாணவா்களும், மழலையா் வகுப்புகளில் 32,807 மாணவா்களும் என ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 364 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.

நிகழாண்டு அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் தென்காசி (8,571), திண்டுக்கல் (8,000), திருச்சி (7,711), கள்ளக்குறிச்சி (7,554), திருவண்ணாமலை (7,386) ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

அதேவேளையில், நீலகிரி (1,022), தேனி (2,207), அரியலூா் (2,625), சிவகங்கை (3,223) ஆகிய மாவட்டங்களில் மாணவா் சோ்க்கை குறைவாக உள்ளது எனத் தெரிவித்துள்ளாா். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த மாா்ச் 1 முதல் மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

மதிமுகவில் கட்சிக்குள் நீண்ட நாளாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யாவுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும்!

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய 'சிங்கார சென்னை' அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும். சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருக... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோவின் புதிய சாதனை! ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகள்!

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத... மேலும் பார்க்க

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம்

பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ம... மேலும் பார்க்க

4 வயது சிறுவனைக் கவ்விச் சென்ற புலி: வால்பாறையில் அதிர்ச்சி!

வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் குடிலில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனின் தலையைப் புலி கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரள மாநிலத்த... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ள நிலையில், காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர்ப... மேலும் பார்க்க