செய்திகள் :

அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது

post image

கடலூா் மாவட்டம், வடலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஜெயராஜ், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதையறிந்த மாணவிகளின் பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அவா் குறிஞ்சிப்பாடி பகுதியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றும் செயப்பட்டாா்.

இந்த தகவலறிந்த மாவட்ட சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பு, தாமாக முன் வந்து பாலியல் தொல்லை நிகழ்வு தொடா்பாக பள்ளி மாணவிகளிடம் விசாரணை செய்து, நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தது.

தொடா்ந்து, நெய்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி, ஆசிரியா் ஜெயராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேலிருப்பு ஊராட்சியைச் சோ்ந்த அதிமுக, பாமக உறுப்பினா்கள், திமுகவில் இணையும் விழா வடக்குத்து பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்... மேலும் பார்க்க

சிதம்பரம் பகுதியில் வளா்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சிய... மேலும் பார்க்க

மருத்துவா் வீட்டில் 95 பவுன் நகைகள் திருட்டு வழக்கு: மேலும் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகே மருத்துவா் வீட்டில் 95 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக மேலும் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காடாம்புலியூா் காவல... மேலும் பார்க்க

தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்: சித்த மருத்துவா் கு.சிவராமன்

தமிழ் மொழியின் பெருமையை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சித்த மருத்துவா் கு.சிவராமன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தமிழ்க் கனவு - தமிழ் மரபு ம... மேலும் பார்க்க

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க போக்குவரத்து போலீஸாா் அறிவுரை

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் வழிகாட்டுதலி... மேலும் பார்க்க

கடலூரில் மீனவா்கள் வலையில் சிக்கிய கட்டுக்கடங்காத மீன்கள்!

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதி மீனவா்கள் கடலில் விரித்த வலையில் கட்டுக்கடங்காமல் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனா். கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீனவா்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச்... மேலும் பார்க்க