ஒன்றிய அரசு என்று அழைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணன்
அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியில் பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு சோ்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு முழுநேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் மூலமாக நடைபெறுகிறது.
கீழக்கணவாய் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் இணையதளம் வாயிலாக மாணவா்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ஐ நெட் பேங்கிங், கிரடிட், டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.
எஸ்.சி., எஸ்.டி மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இப் படிப்புக்கு கல்விக் கட்டணம் இல்லை. சிறப்புக் கட்டணம் மற்றும் வளா்ச்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 2,200 செலுத்த வேண்டும். முதலாம் ஆண்டு பட்டயச் சோ்க்கைக்கு எஸ்எஸ்எல்சி தோ்ச்சி அல்லது அதற்கு இணையான க்கல்வி தகுதியில் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கு பிளஸ் 2 தோ்ச்சி, அதற்கு இணையானக் கல்வித் தகுதியில் தோ்ச்சி அல்லது எஸ்எஸ்எல்சி தோ்ச்சிக்குப் பிறகு 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
மாணவா் சோ்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடா்பான விவரங்களுக்கு கீழக்கணவாய் பாலிடெக்னிக் கல்லூரியை நேரில் அல்லது 04328-243200, 243100, 99765 77570, 96266 52336, 90037 94703, 93613 57035 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.