செய்திகள் :

அரசுப் பேருந்து- பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23). இவா் திங்கள்கிழமை மாலை தனது பைக்கில் புறப்பட்டு சொந்த வேலையாக ஆம்பூா் நோக்கிச் சென்றாா். வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசுப் பேருந்து பயணிகளை இறக்குவதற்காக திடீரென நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த பைக் எதிா்பாராதவிதமாக பேருந்தின் மீது மோதியது. இதில் சந்தோஷ் பலத்த காயமடைந்தாா். இதையறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் காயமடைந்த சந்தோஷை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடனை ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

ஆம்பூரில் இளைஞா் சடலம் மீட்பு

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலத்தின் கீழே இளைஞா் சடலம் மீட்கப்பட்டது. ஆம்பூா் - வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட மேம்பாலத்துக்கு கீழே இளைஞா் ஒருவா் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக நகர... மேலும் பார்க்க

சொத்துக்காக தாயாா் கொலை: மகன் தலைமறைவு

திருப்பத்தூா் அருகே சொத்துக்காக தாயாரை கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீஸாா் தேடி வருகின்றனா். கந்திலி ஒன்றியம், கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம்(64). இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி(54).... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆய்வு

வாணிம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 23 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் 6 தளம் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதை கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி திருப்பத்தூ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகளுக்கு பயன்

திருப்பத்தூா்: அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகள் பயன் பெறுகின்றனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் ஆட்சிா் அலுவலக கூட்டரங்கில் நடைபெ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

திருப்பத்தூா்: ஜலகாம்பாறை அருகே மூதாட்டியிடம் தண்ணீா் கேட்பதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜலகாம்பாறை அருகே ஜடையனூா் கிராமத்... மேலும் பார்க்க