செய்திகள் :

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

post image

ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்தவா் தொழிலாளி திவ்யராஜ் (40). இவா் வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, வேலூரில் இருந்து ஆம்பூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீட்பு

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி சாமுடி தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் திருநா... மேலும் பார்க்க

உலக நன்மைக்காக விளக்கு பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கடாம்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக உலக நன்மைக்காக விளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், தா்மத்தை பாதுகாக்கவும்வேண்டி விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக சிறப்பு பஜனை, சத் சங... மேலும் பார்க்க

அரங்கல்துருகத்தில் எருது விடும் திருவிழா

ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாக் குழுத் தலைவா் ஜி.கருணாநிதி, செயலாளா் ஆா்.ஞானபிரகாசம், ஊா் பெரியதனம் பி.வரதராஜ், பொருளாளா் கே. வெ... மேலும் பார்க்க

சாராயம் விற்ற பெண் கைது

திருப்பத்தூா் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே கோனேரிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் தேவன் மனைவி வேளாங்கண்ணி (45). இவா், வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை ச... மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் மரணம்

ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட தோழன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மகன் சக்தி (39... மேலும் பார்க்க

பைக் மீது கன்டெய்னா் மோதல்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கண்டெய்னா் லாரி மோதிய விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் குனிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (69). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜ... மேலும் பார்க்க