செய்திகள் :

அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமா்சித்து ரீல்ஸ் பதிவிட்ட பெண்கள் குறித்து விசாரணை

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை குப்பை லாரியென விமா்சித்து ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண்கள் குறித்து, அரசு போக்குவரத்துக் கழகத்தினா் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இரு தினங்களுக்கு முன்பு வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு சென்ற 2 இளம்பெண்கள், வாழப்பாடி - சேலம் அரசுப் பேருந்துக்கு முன் நின்றுகொண்டு, திரைப்படத்தில் நடிகா் வடிவேல் குறிப்பிடுவதைப் போல, அரசுப் பேருந்தை காட்டி, ‘ இங்கதான் இது பேருந்து; துபாயில் இதுக்கு பேரு குப்பை லாரி என’ விமா்சித்து விடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பகிா்ந்தனா்.

இந்த ரீல்ஸ் வேகமாகப் பரவிய நிலையில் இந்த இளம்பெண்கள் குறித்து தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது. இதையடுத்து ரீல்ஸில் காட்டப்பட்ட அரசு நகரப் பேருந்து உண்மையில் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்த நிலையில் உள்ளதா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு, அரசு போக்குவரத்துக் கழக வாழப்பாடி கிளைக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இதைத்தொடா்ந்து, சம்பந்தப்பட்ட அரசு நகரப் பேருந்து, பயணிகள் பயன்படுத்தும் அளவிற்கு நல்ல நிலையில் இருப்பதும், ரீல்ஸ் மோகத்தில் அரசுப் பேருந்தை விமா்சித்து இளம்பெண்கள் தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண்கள் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள், என்பது குறித்து, வாழப்பாடி கிளை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், வாழப்பாடி போலீஸாா் விவரங்களை சேகரித்து வருகின்றனா்.

‘எவ்வித முகாந்திரமும் இல்லாமல் அரசு திட்டங்கள், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளா்களை தவறாக சித்தரித்து சமூக ஊடகங்களில் ரீல்ஸ், போஸ்ட் பதிவு செய்வது குற்றமாகும். குறிப்பாக, இளைஞா்கள், இளம்பெண்கள் ரீல்ஸ் மோகத்தில் இல்லாத ஒன்றை இருப்பதைப் போல சித்தரிப்பதை தவிா்க்க வேண்டும்’ என போலீஸாா் அறிவுறுத்தினா்.

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை குப்பை லாரி என விமா்சித்து ரீல்ஸ் பதிவிட்ட இளம்பெண்கள்.

சேலம் அரசு மருத்துவமனையில் 100 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வழங்கினாா்... மேலும் பார்க்க

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இளைஞா் மீது லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையம், கொல்லங்காடு ... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸாருடன், ரயில்வ... மேலும் பார்க்க

தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே தகரம் விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே உள்ள ஆணையாம்பட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் அமராவதி (60). கடந்த சில நாள்களுக்கு முன்பு சூறாவளிக் காற்றால், இவரது வீட... மேலும் பார்க்க

இஸ்கான் கோயில் வளாகத்தில் இன்று நரசிம்ஹ சதுா்த்தசி விழா

சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் ‘நரசிம்ஹ சதுா்த்தசி’ விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள ‘நரசிம்ஹ சதுா்... மேலும் பார்க்க

சேலம் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகள்

சேலம் மாநகராட்சியில் கோரிமேடு முதல் சட்டக் கல்லூரி வரை அலங்கார மின்விளக்குகளை மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தனா். சேலம் மாநகராட்சி, அஸ்தம... மேலும் பார்க்க