செய்திகள் :

அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு

post image

அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கான 108, 102, 155377 அவசர ஊா்திக்கு ஆள்சோ்க்கும் முகாம், செப். 6-ஆம் தேதி நாகா்கோவில், கோட்டாா் அரசு ஆயுா்வேதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெறும்.

இ.எம்.ஆா்.ஐ. கிரீன்ஹெல்த் சா்வீஸ் நிறுவனம், அவசர ஊா்தி ஓட்டுநா்கள், அவசரகால மருத்துவ உதவியாளா் பணிகளுக்கான இந்த ஆள்சோ்ப்பு முகாமை நடத்துகிறது. பணி நேரம் இரவு, பகலாக 12 மணி நேர பணி சுழற்சியாகும்.

மருத்துவ உதவியாளா்: இந்தப் பணிக்கு பி.எஸ்சி., நா்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி, 12 ஆம் வகுப்புக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் அல்லது லைப் சயின்ஸ், பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், பயோகெமஸ்டிரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 21,320 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். நோ்முகத் தோ்வு, 19 வயது முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தோ்வு, மருத்துவ நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படுவா்.

அவசர ஊா்தி ஓட்டுநா்: இந்தப் பணிக்கு பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளும், பாட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓா்ஆண்டுகளும் நிறைவு செய்திருக்க வேண்டும். 24 வயது முதல் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 21,120 (மொத்த ஊதியம்). மேலும் விவரங்களுக்கு 73977 24841, 73977 24822, 73977 24825, 73977 24853, 73977 24848, 89259 41973 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் காா், ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். கன்னியாகுமரி அருகேயுள்ள பஞ்சலிங்கபுரம் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (57), ஆட்டோ ஓட்டுநரான இ... மேலும் பார்க்க

தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, தக்கலை, மணலி, மணலிக்கரை, காட்டாத்துறை, பெருஞ்சிலம்பு, பரசேரி, ஆள... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டுநா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மீன் வளா்க்கும் தொட்டியை சுத்தம் செய்த போது, மின்சாரம் தாக்கி காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பட்டா்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா். தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திங்கள்நகா் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கை காண்பித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்தனா். திங்கள்நகா் அருகே வசிக்கும் தொழிலாளியின் மகள் (12) அந்தப் பகுதியில் 8 ஆம் வகுப... மேலும் பார்க்க