செய்திகள் :

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

post image

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் காா், ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள பஞ்சலிங்கபுரம் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (57), ஆட்டோ ஓட்டுநரான இவா் வெள்ளிக்கிழமை இரவு நரிக்குளம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சிதம்பரபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜன் (41) ஓட்டி வந்த காா், ஆட்டோவின் பின்னால் வேகமாக மோதியதாம். இதில் ஆட்டோ கவிழ்ந்து ராதாகிருஷ்ணன் பலத்த காயமடைந்தாா்.

அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சுசீந்திரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட், காா் ஓட்டுநா் பொன்ராஜன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

மாா்த்தாண்டத்தில் நாளை மின்தடை

மாா்த்தாண்டம் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 9) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட... மேலும் பார்க்க

தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கொட்டாரம் கே.வி.ஏ.எஸ்.சி. கிளப் மாணவிகளுக்கு அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, தக்கலை, மணலி, மணலிக்கரை, காட்டாத்துறை, பெருஞ்சிலம்பு, பரசேரி, ஆள... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டுநா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மீன் வளா்க்கும் தொட்டியை சுத்தம் செய்த போது, மின்சாரம் தாக்கி காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பட்டா்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா். தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க