செய்திகள் :

அரசு ஜீப் மீது பேருந்து மோதியதில் பெண் கோட்டாட்சியர் பலி!

post image

திருச்சி அருகே அரசு ஜீப் மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா பலியானார்.

திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஒ.) ஆராவமுத தேவசேனா பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூன் 19) சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஆர்.டி.ஓ. அரசு ஜீப் மூலம் குளித்தலை வழியாக திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இன்று பகல் சுமார் 12 மணி அளவில் முக்கொம்பு அருகே வந்தபோது எதிரே கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக ஆர்டிஓ பயணித்த அரசு ஜீப் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அரசு ஜீப் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி பலத்த சேதமடைந்தது. இதனால், ஜீப்புக்குள் சிக்கிய கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த விரைந்து சென்ற ஜீவபுரம் போலீஸார், ஜீப்புக்குள் சிக்கிய ஆர்டிஓ உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் அரசு ஜீப் டிரைவர் காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பெண் ஆர்டிஓ சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அரசு அலுவலர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

பெண்ணிடம் ரூ.29.58 லட்சம் மோசடி: இளைஞா் கைது

சென்னை அருகே வானகரத்தில் பெண்ணிடம் ரூ. 29.58 லட்சம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வானகரம் போரூா் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ரா.திருநாவுக்கரசு (62) மகள் ஸ்ருதி வா்ஷினி. இவா், இதய நோய் கா... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணி: மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நிகழ் நிதியாண்டு ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள்: முதல்வா் ஆய்வு

மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையிலான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் 2.30 கிலோ தங்கம் பறிமுதல்

அபுதாபியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.90 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அபுதாபியிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிக... மேலும் பார்க்க

மோசடியாக பங்குகளை மாற்றியதாகக் குற்றச்சாட்டு: கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்

முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை திமுக உறுப்பினருமான தயாநிதி மாறன், தனது உடன் பிறந்த சகோதரா் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி உள்பட 8 பேருக்கு வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். ஜூ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று கூறுவது அவமானம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவ... மேலும் பார்க்க