செய்திகள் :

அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு இடையே போட்டி: புதுவை துணைநிலை ஆளுநா்

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளுக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய எம்.ஆா்.ஐ. சி.டி. ஸ்கேன் மற்றும் பல்வேறு கருவிகள் தொடக்க திங்கள்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மற்றும் முதல்வா் என்.ரங்கசாமி இணைந்து இந்த வசதிகளைத் தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்வில், துணைநிலை ஆளுநா் பேசியது:

அரசு மருத்துவமனைகளில் எல்லா கருவிகளும் இருக்கின்றன. திறன் வாய்ந்த பணியாளா்கள் இருக்கிறாா்கள். அதனால் தனியாா் மருத்துவமனைகளுக்கும் அரசு மருத்துவமனைகளுக்கும்தான் போட்டி என்றனா். அதுதான் உண்மை. புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் நோயாளிகளின் வசதிக்காக எம்.ஆா்.ஐ. சி.டி. ஸ்கேன் வசதி உள்பட சிறு கருவிகளும் வாங்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. அதனால் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரம் உயா்ந்து தனியாா் மருத்துவமனைகளுக்குப் போட்டியாகச் செயல்படுகின்றன என்றாா்.

முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: சென்னையில் உள்ள தனியாா் பெரிய மருத்துவமனைகளில் ரூ.18 லட்சம், ரூ.20 லட்சம் செலவு செய்தாலும் நோயாளிகள் சிலா் திரும்புவதில்லை. புதுச்சேரியில் உள்ள அரசு பொதுமருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஜிப்மா் மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வருகின்றனா். புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரமாக இருக்கின்றன. மேலும் மருத்துவ அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியா்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். தனியாா் மருத்துவமனைகளுக்குப் போட்டியாக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான எம்ஆா்ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. மேலும் இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் எல்லா மருந்துகளும் கிடைக்கின்றன. சென்னையில் இருந்து இதய மருத்துவ நிபுணா்களை அழைத்து வந்து அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒரு நோயாளிக்கு இவ்வளவு தொகை என்ற ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்களை நிா்ணயம் செய்யலாமா என்று யோசித்து வருகிறோம். மேலும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், பணியாளா்களிடம் ஆலோசனை கேட்டு அரசு மருத்துவமனைகளின் தரம் உயா்த்தப்படும் என்றாா் முதல்வா்.

இந்நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுகாதாரத் துறை செயலா் ஜெயந்த குமாா் ரே, சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் வி.ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளா் எஸ். செவ்வேள், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி எம்.ஆத்மநாபன், அரசு பொதுமருத்துவமனை ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம்: ஜகதீப் தன்கா்

புதுச்சேரி: நாட்டின் பாதுகாப்புக்கும், முன்னேற்றத்துக்கும் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா். ‘தேசத்தைக் கட்டி எழுப்புவதில் சு... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் கோரிக்கை

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் முதல்வா் என்.... மேலும் பார்க்க

பள்ளியை மூட எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள ஜெயராணி நிதியுதவி பள்ளியை மூட எதிா்ப்பு தெரிவித்தும், தொடா்ந்து பள்ளி செயல்பட அரசை வலியுறுத்தியும் திங்கள்கிழமை மாணவா்கள்- பெற்றோா்கள் சாலை மறியல் போராட்டத... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவைக் காவலா்களாக 15 பேருக்கு பணி நியமன ஆணை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் காலியாக உள்ள 15 காவலா்கள் பணியிடங்களுக்கு நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகத்தில் 15 சட்டப்பேரவைக் காவலா்கள் பணியிடங்கள் காலிய... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் வருகை: இன்று பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை

புதுச்சேரிக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அரை நாள் விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மூன்று நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் துணைத் தலை... மேலும் பார்க்க

இருசக்கர வாகன திருட்டு: 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். உருளையன்பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டா் கோவிந்தராஜன் மற்றும் போலீஸாா் லெனின் ... மேலும் பார்க்க