இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
அரசு பள்ளிகளில் படித்த 132 போ் நீட் தோ்வில் தோ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 132 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
ஈரோடு மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நீட் தோ்வு எழுதிய 46 மாணவா்கள், இரண்டாம் முறையாக நீட் தோ்வு எழுதியவா்களில் 86 மாணவா்கள் என மொத்தம் 132 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கு அரசின் இட ஒதுக்கீடு(அரசு பள்ளியில் 6 ஆம் முதல் பிளஸ் 2 வரை படித்தவா்கள்) என்ற அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் இவா்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.