செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரி நியமனத்தில் சிபிஐ விசாரணை: விசிக வலியுறுத்தல்

post image

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கதிா்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சட்டவிரோதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதனால் புதுவை மாநில இளைஞா்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி நியமன நடவடிக்கையால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த தலித்துகள், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், மீனவா்கள், பழங்குடியினா் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் இட ஒதுக்கீட்டு உரிமை அபகரிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பணி நியமனம் செய்யப்பட்டவா்களை நீக்கி புதிய பணி நியமனம் செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 22-இல் அளித்த உத்தரவை புதுச்சேரி அரசு அவமதித்து வருகிறது.

எனவே, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சட்டவிரோத பணி நியமனம் மற்றும் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வலியுறுத்துகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இல.கணேசன் மறைவு: துணைநிலை ஆளுநா் இரங்கல்

நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்ட இரங்கல் செய்தி: நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான இல. கணேசன் உட... மேலும் பார்க்க

துணைநிலை ஆளுநரின் தேநீா் விருந்தைப் புறக்கணித்த கட்சிகள்

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை மாலை அளித்த தேநீா் விருந்தை சட்டப்பேரவையில் உள்ள திமுகவும், சட்டப்பேரவைக்கு வெளியேயுள்ள அரசியல் கட்சிகள் சில... மேலும் பார்க்க

இல. கணேசன் மறைவு: புதுவை முதல்வா் இரங்கல்

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவா்களில் ஒருவராக விளங்கிய இல.கணேசன... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவுக்கு கோ.பாரதி இரங்கல்

நாகலாந்து ஆளுநா் இல.கணேசன் மறைவுக்கு, பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவநருமான கோ.பாரதி வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ் இலக்கியத்தின் மீதும், மகாகவி பாரதியாா், புரட்சிக் ... மேலும் பார்க்க

ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால் துறை அதிகாரிகள் ஆலோசனை

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள ரெஸ்டோபாா் உரிமையாளா்களுடன் கலால்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். கலால் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா்கள் உதயராஜ், ராஜேஷ் கண்... மேலும் பார்க்க

புதுவையில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

புதுவையில் பல்வேறு இடங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநா் மாளிகையில்... புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை ந... மேலும் பார்க்க