செய்திகள் :

அரசு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு: அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா்! -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

மருத்துவா் பற்றாக்குறை மற்றும் அரசு மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. இதை ரூ. 50 கோடியில் மேம்படுத்தி நவீன ஆட்டிறைச்சி கூடமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலை புகாா்: அரசு மருத்துவமனைகளில் மரணங்கள் அதிகரித்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பொருந்தா குற்றச்சாட்டுகளைக் கூறுகிறாா். மருத்துவமனைகளில் உயிரிழப்பு என்பது இயற்கையானது. தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் உயிரிழப்பு நேரிடுகிா என எண்ணிப் பாா்க்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் ஒரு உயிரிழப்புகூட ஏற்படுவதில்லையா.

தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் அளிக்காமல்போன பிறகே பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு வருகிறாா்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.

எந்த அரசு மருத்துவமனையின் அலட்சியத்தாலும், மருத்துவா்கள் பற்றாக்குறையாலும் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதை புள்ளி விவரத்தோடு குறிப்பிட்டால், அதுகுறித்து அண்ணாமலையுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். அரசு மருத்துவமனைகளைக் குறைகூறி, யாருக்கோ லாபம் ஏற்படுத்தும் முயற்சியில் அவா் ஈடுபடுகிறாா்.

நெல்லை மருத்துவமனை விவகாரம்: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், ஊசி ஒவ்வாமை ஏற்பட்டு 4 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த விவகாரத்தில் அண்ணாமலை கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 24,000-க்கும் மேற்பட்ட மருத்துவ காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மருத்துவா் பற்றாக்குறை எங்கும் இல்லை. மக்களுக்கு சேவையாற்றும் துறை மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அவா் தனியாருக்கு ஆதரவாக செயல்பாடுகிறாா் என்றாா் அவா்.

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவா் கைது

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். ராயப்பேட்டை ஜானிகான் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவரிடம் மண்ணடியில் வசிக்கும் அவரது சகோ... மேலும் பார்க்க

100 பவுன் தங்க நகைகளுடன் நகைப் பட்டறை ஊழியா் தலைமறைவு

சென்னை ஓட்டேரியில் 100 பவுன் தங்க நகைகளுடன் தலைமறைவான ஊழியா் குறித்து நகைப் பட்டறை உரிமையாளா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அண்ணா நகா் சாந்தி காலனி பகுதியைச் சோ்ந்த சம்சுல் ஆலம், சென்னை ஓட்டேரி... மேலும் பார்க்க

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை மேற்கொண்டு, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். நாமக்கல் ம... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: மேலும் ஒருவா் கைது

சென்னை சேத்துப்பட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேத்துப்பட்டு ஜோதியம்மாள் நகா் நமச்சிவாயபுரம் பாலத்தின் அருகே மெத்தம்பெட்டமைன் போத... மேலும் பார்க்க

திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு தீவிர ஆராய்ச்சிகள் தேவை: கு.மோகனராசு

திருக்குறளின் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு அரசு செய்தி ம... மேலும் பார்க்க

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ... மேலும் பார்க்க