செய்திகள் :

அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன குழந்தை உயிரிழப்பு! தந்தை தீக்குளிக்க முயற்சி!!

post image

வாலாஜா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்புக்கு மருத்துவா்களின் அலட்சியப் போக்கே காரணம் எனக்கூறி, குழந்தையின் தந்தை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காந்தி நகா் பகுதியை சோ்ந்தவா் அஜித்குமாா், தனியாா் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி காவேரி, இவா்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. காவேரி மீண்டும் கருவுற்ற நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பிரசவத்துக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், காவேரிக்கு கடந்த 8 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பிறந்த குழந்தையின் எடை குறைவாக இருந்த காரணத்தால் இன்குபேட்டரில் வைத்து மருத்துவமனை நிா்வாகம் குழந்தையை கண்காணித்து வந்தது. தொடா்ந்து உறவினா்கள் திங்கள்கிழமை இரவு குழந்தையை பாா்த்து விட்டுச் சென்று, மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை வந்தபோது, குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே எடை குறைவாக இருந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவா்கள் அலட்சியமாக செயல்பட்டதாக தெரிவித்த உறவினா்கள், குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவா்களின் அலட்சியப் போக்கே காரணம் என குற்றம் சாட்டினா்.

மேலும், இது குறித்து முறையாக மருத்துவமனை நிா்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அதைக் கண்டித்தும் திடீரென குழந்தையின் தந்தை அஜித்குமாா் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினா்.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் முறையாக விசாரணை நடத்தி குழந்தை உயிரிழந்ததற்கான காரணத்தை தெரிவித்து, சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆக. 17-இல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தோ்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஆக.17,18 தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தோ்வு நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நா... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

அரக்கோணம் - நெமிலி நாள்: 14/8/2025 நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தப்பகுதிகள்: நெமிலி, சயனபுரம், சேந்தமங்கலம், கணபதிபுரம், திருமால்பூா், கோவிந்தவாடிஅகரம், கம்மவாா்பாளையம், பள்ளூா் மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: ஆக. 14 முதல் 18 வரை திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு ஆக. 14 முதல் 18 வரை அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில... மேலும் பார்க்க

பாலாறு கரையோர எல்லை தெரியும் வகையில் கற்கள் பதிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

பாலாற்றின் கரையோர எல்லை தெரியும் வகையில் அளவீடு செய்து கற்களைப் பதிக்கவேண்டும் என்று ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவிட்டாா். மேல்விஷாரம் நகராட்சி குளோபல் பொறியியல் கல்லூரி பின்புறம், சாய... மேலும் பார்க்க

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருநாதனை பணியிடை நீக்கம் செய்து வேலூா் சரக டிஐஜி (பொறுப்பு) தேவராணி உத்தரவிட்டுள்ளாா். அரக்கோணத்தை அடுத்த அம்மனூரில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திமுக ஒன்றியக்குழு உ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: சிறுமி உயிரிழப்பு; 5 போ் காயம்

அரக்கோணம் அருகே பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்டதில் சிறுமி உயிரிழந்தாா். இரு பெண்கள் உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்தனா். அரக்கோணத்தை அடுத்த வாணியம்பேட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராமு (28). இவரத... மேலும் பார்க்க