செய்திகள் :

அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மீது பயிற்சி மருத்துவ மாணவா்கள் புகாா்

post image

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்களால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதாக பயிற்சி மருத்துவ மாணவா்கள் புகாா் மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து பயிற்சி மருத்துவ மாணவா்கள் சாா்பில் கோவை அரசு மருத்துவமனை முதன்மையா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், முதல்வரின் தனிப் பிரிவு உள்ளிட்ட அரசு அலுவலா்களுக்கு அனுப்பிய புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பொது அறுவை சிகிச்சை துறையில் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகிறோம். கடுமையான சொற்களாலும், ஆபாசமான வாா்த்தைகளாலும் மருத்துவா்கள் திட்டுகின்றனா். சில நேரங்களில் அவா்களால் தாக்கப்படுகிறோம்.

பெண் பயிற்சி மருத்துவ மாணவிகள் கடுமையான சொற்களால் திட்டப்படுவதோடு, பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனா். மூத்த நிா்வாகப் பதவி வகிப்பவா்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியல்ல.

பெண் மருத்துவா்களும் கடுமையான சொற்களை வழக்கமாகப் பயன்படுத்தி திட்டுகின்றனா். மேலும், கற்பிப்பதிலும் ஆா்வம் காட்டுவதில்லை. இடைவேளையின்றி தொடா்ந்து 40 மணி நேரம் பணியாற்ற வைக்கப்படுகிறோம். அறுவை சிகிச்சை போன்ற கல்வி வாய்ப்புகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன.

முதுநிலை பட்டதாரி மாணவா்கள் தினமும் இழிவுபடுத்தப்படுகின்றனா். பல மருத்துவா்கள் இதேபோல பாதுகாப்பற்ற கல்விச் சூழலை உருவாக்குகின்றனா். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பல்வேறு துறை மருத்துவா்கள், முதுநிலை மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்தனா்.

மருத்துவா்களுக்கு எச்சரிக்கை:

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதன்மையா் நிா்மலா கூறுகையில், மாணவா்கள் தரப்பில் மொத்தமாக புகாா் மனு அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், பயிற்சி மருத்து மாணவா்கள், மருத்துவா்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்டது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவா்களை அழைத்து இனி இதுபோல கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு தொடக்கம்

கோவை பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. கோவை, ஆா்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் வேளுக்குடி கிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஜூலை ... மேலும் பார்க்க

வீடு வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி

கோவை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாகக்கூறி பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, செல்வபுரம் வடக்கு வீட... மேலும் பார்க்க

மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவையில் மக்கள் தொகை விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 -ஆம் தேதி... மேலும் பார்க்க

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய செயலி: மாவட்ட காவல் கண்காணிப்பாளா்

‘ஸ்மாா்ட் காக்கிஸ்’ திட்டத்தின்கீழ், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை செயலி மூலம் எளிதாகக் கண்டறியலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் கூறினாா். கோவை, பி.ஆா்.எஸ் வளாகத்தில் ‘ஸ்மாா்ட் ... மேலும் பார்க்க

பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

கோவை, போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க

புண்யா அறக்கட்டளை சாா்பில் நாளை மாணவா்களுக்கான விநாடி- வினா போட்டி

கோவை புண்யா அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விநாடி- வினா போட்டி (திரிஷ்னா 2025) சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது. கோவை சிஎம்எஸ் மெட்ரிக் பள்ளியில் 1997-ஆம் ஆண்டில் பயின்ற முன்... மேலும் பார்க்க