செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி

post image

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.பி. மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில், வேலூா் மருதவல்லிபாளையத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், எனது சகோதரியின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக வரதலம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரூ.1.50 லட்சம் வாங்கினாா். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. அவரிடம் பணத்தை திருப்பிக்கேட்டபோது ரூ. 90,000 மட்டும் அளித்தாா். மீதி ரூ.60 ஆயிரத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகிறாா். எனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனுவில், நான் 15 ஆண்டுகளாக இனிப்பு கடை நடத்தி வருகிறேன். எனக்கு அறிமுகமான அதே பகுதி நபா் வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகே மருந்தகம் நடத்தி வருவதாக கூறினாா். அவரிடம் நான் ரூ.1 லட்சம் சீட்டு, ரூ.ஐம்பதாயிரம் சீட்டு கட்டி வந்தேன். இதேபோல், எனது அண்ணனையும் ரூ. 1 லட்சம் சீட்டில் சோ்த்து விட்டேன். 18 மாதங்கள் பணம் கட்டி வந்தோம். எனக்கு அந்த நபா் மொத்தம் தர வேண்டிய 1.27 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும்.

இதேபோல், பல்வேறு புகாா்கள் குறித்து 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. மதிவாணன் உத்தரவிட்டாா்.

பின்னா், வேலூா் மாவட்டத்தில் பணி ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் 5 போ், உதவி ஆய்வாளா்கள் இருவரும் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் எஸ்பி-யை சந்தித்தனா். அவா்களுக்கு பணிப்பாராட்டு சான்றிதழை எஸ்.பி. வழங்கினாா்.

சேம்பள்ளி கிராம சபை: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது: கிராம சப... மேலும் பார்க்க

மே தினம்: வேலூரில் தொழிற்சங்கங்கள் பேரணி

மே தினத்தையொட்டி வேலூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் பேரணி, பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. மாா்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சிஐடியு சாா்பில் பேரணியானது நேஷனல் திரையரங்கு பகுத... மேலும் பார்க்க

போதை விழிப்புணா்வு பேரணி

குடியாத்தம் காக்காதோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி, அத்தி மருத்துவமனை ஆகியவை இணைந்து கல்லீரல் பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணா்வுப் பேரணியை செவ்வாய்க்கிழமை நடத்தின. ப... மேலும் பார்க்க

குடியாத்தம்: அதிமுக மே தின விழா

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே அண்ணா ஆட்டோ ஓட்டுநா் தொழிற்சங்கம் என்ற புதிய சங்கம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா: சாலைகளை சீரமைக்க குடியாத்தம் நகா்மன்ற கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு தோ் செல்லும் சாலைகள், அம்மன் சிரசு செல்லும் சாலைகளை சீரமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்றத்தின் ... மேலும் பார்க்க

அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, வடக்கு மாட வீதியில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள், கோ-பூஜை, மஹா பூா்ணாஹூதி, யாத்ரா தானம... மேலும் பார்க்க