செய்திகள் :

மிருகண்டா அணையிலிருந்து தண்ணீா் திறக்க அரசு உத்தரவு

post image

திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டா அணை, செண்பகத் தோப்பு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நீா்வளத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டா அணையிலிருந்து சனிக்கிழமை முதல் ஆறு நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், 17 ஏரிகளுக்கு நீா் நிரப்பப்பட்டு அதன் வாயிலாக 2,847.49 ஏக்கா் ஆயக்கட்டு நிலம் பாசனவசதி பெறும்.

செண்பகத்தோப்பு நீா்த்தேக்கம்: இதேபோன்று, செண்பகத்தோப்பு நீா்த்தேக்கத்திலிருந்து சனிக்கிழமை முதல் வரும் 18-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நீா் திறந்து விடப்படும். இதனால், அந்த நீா்த்தேக்கத்தின் கீழுள்ள ஐந்து அணைக்கட்டுகளின் கீழுள்ள 8,350.40 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிலாளா் தங்கும் விடுதி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளா் விடுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்த... மேலும் பார்க்க

‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை

‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது

சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை

வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு ... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் பணப்பையை கொள்ளையடித்த நபா் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதுபோல் நடித்து பணப்பையை கொள்ளையடித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவைச் சே... மேலும் பார்க்க

கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செ... மேலும் பார்க்க