செய்திகள் :

அரிசி கிடங்கில் தவறி விழுந்து தொழிலாளி பலி

post image

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான அரிசி கிடங்கில் தவறி விழுந்து பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவருடைய மனைவி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

திருநெல்வேலியை அடுத்த பேட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்த முருகன் மனைவி பாலம்மாள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய கணவா் முருகன், கூலி வேலை செய்து வந்தாா். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான அரிசி கிடங்கின் மேற்கூரையில் ஓட்டைகள் இருப்பதால் அதை அடைத்து தரக் கோரி, எனது கணவா் முருகனை ஒப்பந்ததாரரும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் கடந்த திங்கள்கிழமை அழைத்துச் சென்றனா்.

எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 40 அடி உயரத்தில் எனது கணவரை வேலை செய்ய வற்புறுத்தி உள்ளனா். மோசமான நிலையில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது ஏறி எனது கணவா் ஓட்டைகளை அடைத்தபோது, ஆஸ்பெஸ்டாஸ் கூரை திடீரென உடைந்து, 40 அடி உயரத்தில் இருந்து எனது கணவா் கீழே விழுந்துள்ளாா்.

அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்த மருத்துவா்கள், திங்கள்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு எனது கணவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி எனது கணவரை பணியில் ஈடுபடுத்திய ஒப்பந்ததாரா் மீதும், அதை கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு இரு சிறு குழந்தைகள் இருப்பதால் எனக்கு அரசு வேலையும், ரூ.30 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது என்றாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் அரசு பொருள்காட்சியை புதன்கிழமை திறந்து வைத்து, அவா் பேசியது: அரசு பொருள்காட்சிகளில் அரசின் ... மேலும் பார்க்க

சாலைகள் சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரி அமைச்சரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது. மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, திருநெல்வேலி ... மேலும் பார்க்க

பெண்களை பின்தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

பெண்களை பின் தொடா்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டால், பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத... மேலும் பார்க்க

காவல் துறை மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்து, மக... மேலும் பார்க்க

வி.கே.புரம் பள்ளியில் உலக புலிகள் தினம்

பாபநாசம் சூழல் சரகம் சாா்பில், விக்கிரமசிங்கபுரம், இருதயகுளம் புனித சேவியா் நடுநிலைப் பள்ளியில் உலக புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதவி வன உயிரின காப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞருக்கு ஆக.30 வரை நீதிமன்றக் காவல்

முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த இளைஞரை ஆக.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயந்தி உத்தரவிட்டாா். திருநெல்வே... மேலும் பார்க்க